Sunday, August 15, 2010

சிதைவு-1

நீ இல்லாத இரவுகளை எப்படி நான் கழிப்பது...

கம்பிகள் அறுபட்டு ,செல்லரித்துபோன
இல்லாத வயலின் ஒன்றில் சோக கீதம் வாசித்து கொண்டிருக்கலாம்.

காற்றில் என்றோ கலந்துவிட்ட
உன் வாசனைக்காய் என் நுரையீரல் செல்கள் ஏங்கி கொண்டிருக்கலாம்.

உனக்கான என் கவிதைகளை
படைப்பதற்காக வார்த்தைகளை தேடித் திருடிக் கொண்டிருக்கலாம்

இல்லாத அல்லது பிறக்க போகும்
நம் குழ்ந்தைக்காய் ஒரு தாலாட்டு கவிதை எழுதி கொண்டிருக்கலாம்.

உன் சாயல் கொண்ட
ஏதாவுது ஒரு பெண்ணிடம் நான் உனையே தேடி கொண்டிருக்கலாம்.

நீல நிற புடவை ஒன்றை
நீ கட்ட தெரியாமல் கட்டும் அழகை நான் ரசித்து கொண்டிருக்கலாம்.

என் தூரிகைககள் தீட்டிய
உன் அரைகுறை ஓவியத்தை முடிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கலாம்.

உன் உதடுகளை மறப்பதற்காக
இரண்டாவது காதலியான என் வென்சுருட்டை முத்தமிட்டு கொண்டிருக்கலாம்.

நீ அவசரத்தில் முடிக்காமல்
விட்டுச் சென்ற உரையாடல்களின் அலைவரிசையை இந்த பிரபஞ்சத்தில் தேடிகொண்டிருக்கலாம்.

நீ இல்லாவிடிலும் வெறுமையான
என் இரவுகளை உன்னோடு நான் காதலித்து கொண்டிருக்கலாம்.

நீ இல்லாத இரவுகளை எப்படி நான் கழிப்பது...

2 comments: